மாமன்னன் இராஜராஜ சோழன் வியந்து, வணங்கி, திருப்பணிகள் செய்து, நிவந்தங்கள் கொடுத்து இங்குள்ள ஸ்ரீநிதீஸ்வரரை வழிபட்டுள்ளான். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இவ்வாலயம் முற்றிலும் சிதிலமடைந்து மண்மேடாகிவிட்டது. தற்போது பக்தர்களின் முழு அர்ப்பணிப்பால் இங்கு ஸ்ரீ நிதீஸ்வரப் பெருமானுக்கும், அம்பிகைக்கும், முழுவதும் கற்கோயிலாகப் பழைமை மாறாமல் புராதனப் பெருமையுடன் திருப்பணிகள் நடைபெற்று 09/04/2014 அன்று மகா கும்பாபிஷேகம் இனிதே நடைபெற்றது. இத்தலத்தில் உள்ள இறைவனை வணங்குவோர்க்கு பூர்வ ஜென்ம பாவங்கள் நீங்கப்பெற்று அவர்களின் விதி புதியதாக மாற்றி எழுதப்படும் என்பதோடு அவர்களின் இல்லங்களில் வறுமை நீங்கி செல்வம் செழித்து மகிழ்ச்சி தங்கும் என்பது உண்மை.
“அன்னமூர்த்தி”, “அன்னவாகனன்” என்று அழைக்கப்படும் படைக்கும் கடவுளாகிய பிரம்மாவும், காக்கும் கடவுளாகிய திருமாலும் இருவருமே தமக்குள் சர்ச்சை ஏற்பட்டு கயிலைநாதனிடம் சென்று தம்மில் யார் பெரியவர் எனக் கேட்க சிவபெருமான் அடியை அல்லது முடியை யார் கண்டு வருகிறார்களோ அவர்தான் பெரியவர் எனக்கூற திருமால் வராக அவதாரம் எடுத்து அடியைக் காண புறப்பட்டுத் தேடி தன் இயலாமையை இறைவனிடம் தெரிவித்து நின்றார். பிரம்மன் அன்னமாய் பறந்து சென்று முடியைக் கண்டதாக பொய்யுரை கூறி நின்றார்...
பதும நிதி,மகாபதும நிதி,மகா நிதி,கச்சப நிதி,முகுந்த நிதி,குந்த நிதி,நீல நிதி மற்றும் சங்க நிதி போன்ற எட்டு வகையான நிதிச்செல்வங்களுக்குத் தலைவன் குபேரன். இச்செல்வங்களுக்குத் தலைவனாக விளங்குவதால் “நிதிபதி” என்று போற்றி வணங்கப்படுபவன்.
" ஆலயம் தொழுவது சாலவும் நன்று "
" உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பாலயம் வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுரவாசல் தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிலிங்கம் கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே! "
" ஆலயம் தொழுவது சாலவும் நன்று "
" உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பாலயம் வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுரவாசல் தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிலிங்கம் கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே! "
SRINIDHEESWARAR TEMPLE TRUST
20/21, NEW COLONY MAIN STREET,
WEST SAIDAPET, CHENNAI – 600015
info@Srinidheeswarar.com / srinidheeshwarar@gmail.com
(+91) 9444036534 / 9444036532
குருபரிகாரஸ்தலமாக விளங்கும் ஸ்ரீ நிதீஸ்வரர் ஆலயத்தில் குருபரிகார பூஜை, அஷ்ட ஐஸ்வர்யங்கள் பெருக ஸ்வர்ணபுஷ்ப அர்ச்சனை செய்ய முன்பதிவு செய்து கொள்ளவும்